'நான்' என்ற அகந்தை
'நான்' என்ற அகந்தை
குரு தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய்தான் என்றார். எவ்வாறு என்று சீடர்கள் ஆவலுடன் வினாவினார்கள்.
குரு கூறினார்,
ஒரு நாள் குளக்கரை அருகே அமர்ந்திருந்தேன்.
ஒரு நாய் தாகத்துடன் நீர் அருந்த வந்தது.
வேகமாய் நீர் குடிக்கச் சென்ற நாய் குரைத்துக் கொண்டே சட்டெனப் பின் வாங்கியது.
சிறிது நேரம் இவ்வாறே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்த நாய், தாகம் அதிகரித்தவுடன் துணிச்சலுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்தது.
அப்போதுதான் அது உணர்ந்தது, இதுவரை தண்ணீரில் தெரிந்தது தன் பிம்பம்தான் என.
அதுவரை நாய் தயங்கியதற்குக் காரணம் அதன் உருவமே.
இதனால் ஞானத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கும் விளக்கம் கிடைத்தது.
நான் ஞானம் அடையத் தடையாய் இருப்பது, 'நான்' தான் என்பதை உணர்ந்தேன்.
அந்த 'நான்' என்ற அகந்தையை ஒழித்தபோது ஞானியாகி விட்டேன். என்றார்.
- Baskar Jayaraman
Source: https://www.facebook.com/photo.php?fbid=1687099207974407&set=a.221921974492145.62054.100000230332057&type=3
- Baskar Jayaraman
Source: https://www.facebook.com/photo.php?fbid=1687099207974407&set=a.221921974492145.62054.100000230332057&type=3
Comments
Post a Comment